என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
Byமாலை மலர்4 Jan 2020 3:31 AM GMT (Updated: 4 Jan 2020 3:31 AM GMT)
ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் கடந்த டிசம்பர் மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. கூடுதல் மாவட்ட ஆட்சியர் நேற்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, குழந்தைகளின் இறப்பு குறித்த எண்ணிக்கை தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. ஏற்கனவே தீவிர நோய் பாதிப்பினால் சேர்க்கப்பட்ட குழந்தைகள், பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாகவும், மருத்துவமனையின் பொறுப்பற்ற தன்மையால் அல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X