search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    ஜம்மு காஷ்மீர் - பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சுரன்கோட்டில் இருந்து ஜம்மு நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். சியாட் பகுதியில் பஸ் செல்லும்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

    தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×