search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    முட்டாள்களில் மிகப்பெரிய முட்டாள் ராகுல் காந்தி - பாஜக எம்.பி. காட்டம்

    குடியுரிமை சட்டத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத ராகுல் காந்தி முட்டாள்களில் மிகப்பெரிய முட்டாள் என அரியானா முன்னாள் மந்திரியும் பாஜக எம்.பி.யுமான நயாப் சிங் சைனி குறிப்பிட்டுள்ளார்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகிப்பவர் நயாப் சிங் சைனி. பாஜகவை சேர்ந்த இவர் கைத்தால் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தை கடுமையாக விமர்சித்த சைனி, ’குடியுரிமை சட்டம் யாருக்கானது? எதை நாம் எதிர்க்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ளாமல் ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார்.

    நயாப் சிங் சைனி

    முட்டாள்களில் மிகப்பெரிய முட்டாள் யாராவது இருந்தால் அது ராகுல் காந்தியாகத்தான் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.’ என குறிப்பிட்டார்.

    அரியானா மாநிலத்தில் முன்னர் பாஜக ஆட்சிக்காலத்தில்  மந்திரியாகவும் இருந்தவர் நயாப் சிங் சைனி என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×