என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஏற்றிச் சென்றவருக்கு ரூ.6100 அபராதம்
Byமாலை மலர்29 Dec 2019 1:34 PM GMT (Updated: 29 Dec 2019 1:34 PM GMT)
லக்னோ நகரில் பிரியங்கா காந்தியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு இருவரும் ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக 6100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
லக்னோ:
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பிலும் நடந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனை அடுத்து கலகத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்று தாராபுரி குடும்பத்தாரை சந்தித்துப் பேசினார்.
போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்று ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்தித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரியங்கா காந்தியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அதில் சென்ற இருவருமே ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக லக்னோ போக்குவரத்து போலீசார் 6100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பிலும் நடந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனை அடுத்து கலகத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார்.
லக்னோ நகரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால், போலீசார் பிரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்று தாராபுரி குடும்பத்தாரை சந்தித்துப் பேசினார்.
போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்று ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்தித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரியங்கா காந்தியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அதில் சென்ற இருவருமே ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக லக்னோ போக்குவரத்து போலீசார் 6100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X