search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரியாக பதவியேற்ற ஹேமந்த் சோரன்
    X
    முதல் மந்திரியாக பதவியேற்ற ஹேமந்த் சோரன்

    ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன் - ஸ்டாலின், மம்தா பங்கேற்பு

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பொறுப்பேற்றார், பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
    ராஞ்சி:

    81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
     
    இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று மதியம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் பங்கேற்ற முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×