என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுலை தனிப்பட்ட முறையில் பாஜக விமர்சித்தாலும் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவோம்- காங்கிரஸ்
Byமாலை மலர்27 Dec 2019 5:29 PM GMT (Updated: 27 Dec 2019 5:29 PM GMT)
ராகுல் உள்பட எங்கள் தலைவர்களை பாஜக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தாலும், நாங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பத்தான் செய்வோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் என்.பி,ஆர்., என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமை தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறுகையில், 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் ஹேரா பேசியதாவது:-
''எந்த சூழ்நிலையிலும் பயம்பட வேண்டாம் என ராகுல் காந்தி எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அவர்கள் (பாஜக) தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யட்டும். நாங்கள் பயப்படப் போவதில்லை.
ஒரு எதிர் கட்சியாக நாட்டில் இளைஞர்களுக்கு நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை குறித்த கேள்விகளை எழுப்புவதிலும் அது குறித்து குரல் எழுப்புவதிலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நாட்டில் நிலவுகிறது.
எப்போதெல்லாம் நாங்கள் அரசின் பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து கேள்வி எழுப்புகிறோமோ அப்போதேல்லாம் எந்த மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என கேட்கிறார்கள் அல்லது அவர்களிடம் பதில் இல்லை என அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்’’ என அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X