search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    குடியுரிமை திருத்த சட்டம் - ராகுலுக்கு சவால் விடுத்த அமித்ஷா

    குடியுரிமை திருத்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையாவது பறிக்கும் அம்சம் இருந்தால் அதை காட்டுமாறு ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
    சிம்லா:

    இமாசல பிரதேசம் சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் சகோதரர்களின் குடியுரிமை பறிக்கப்படப் போகிறது என்று காங்கிரசும் மற்ற கட்சிகளும்  தவறாக வழிநடத்துகின்றன, வதந்திகளைப் பரப்புகின்றன என்பதை அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு சொல்ல விரும்புகிறேன்.

    எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் எந்தவொரு விதியையும் தயவுசெய்து முன்வைக்குமாறு ராகுல் காந்திக்கு  நான் சவால் விடுகிறேன்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையையும் பறிக்க எந்த விதியும்  இல்லை. இந்த சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அது குடியுரிமையை பறிக்காது.

    நீங்கள் (காங்கிரஸ்) தயவுசெய்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் அமைதியை அழிக்க முயற்சிக்காதீர்கள். உங்களிடம் உண்மைகள் இருந்தால், அவற்றை மக்கள் முன் முன்வைக்கவும்.

    மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து, அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாங்கள் குடியுரிமையை வழங்குகிறோம், அதை பறிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×