என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லக்னோவில் வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Byமாலை மலர்25 Dec 2019 10:29 AM GMT (Updated: 25 Dec 2019 11:21 AM GMT)
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
லக்னோ:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்த தினம் இன்று (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திரமோடி உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், பா.ஜ.க. நிர்வாகிகளும் திரளாக சென்று மரியாதை செலுத்தினார்கள்.
37 வயதில் எம்.பி.யாக தேர்வான வாஜ்பாய் பாராளுமன்றத்துக்கு 9 தடவை தேர்வாகி எம்.பி.ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தான் அதிக முறைகள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
இதை நினைவு கூறும் விதமாக லக்னோவில் வாஜ்பாய்க்கு சுமார் 25 அடி உயரத்துக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார்.
இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசம் மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X