search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை
    X
    சிறை

    பாகிஸ்தான் சிறையில் வாடும் பீகார் பெண்

    பாகிஸ்தான் சிறையில் வாடும் பீகார் பெண்ணின் கிராமம் எது, அவரின் உறவினர்கள் யார் என்று தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ரோதாஸ் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    பாட்னா:

    பாகிஸ்தானில் லாகூரில் உள்ள மத்திய சிறையில் நகேயா (வயது 51) என்ற பெண் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தன் கணவர் பெயர் தாமன், பீகார் மாநிலம் தேரி ஆன் சோனில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல், பீகார் மாநில போலீஸ் தலைமையகம் மூலம் ரோதாஸ் மாவட்ட போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் விசாரணை

    இதையடுத்து, அந்த பெண்ணின் கிராமம் எது, அவரின் உறவினர்கள் யார் என்று தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையமும் ஈடுபட்டுள்ளது.

    அந்த பெண்ணின் குணாதிசயம் என்ன? எந்த சூழ்நிலையில் அவர் பாகிஸ்தானை அடைந்தார் என்பதை விசாரித்து அறிந்து பாகிஸ்தானிடம் தெரிவிப்போம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யவீர் சிங் தெரிவித்தார்.
    Next Story
    ×