search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணியில் பங்கேற்ற ஜே.பி.நட்டா
    X
    பேரணியில் பங்கேற்ற ஜே.பி.நட்டா

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக பேரணி

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்தியது.
    கொல்கத்தா:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போரட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தின் அம்சங்களை விளக்கியும் பேரணி நடைபெற்று வருகிறது.

    அவ்வகையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியை நட்டா துவக்கி வைத்தார். இதில் மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ், தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இந்த பேரணியானது மத்திய கொல்கத்தாவின் ஹிந்த் சினிமா பகுதியில் இருந்து, ஷியாம்பஜார் வரை நடைபெற்றது. 

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×