என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக பேரணி
Byமாலை மலர்23 Dec 2019 9:18 AM GMT (Updated: 23 Dec 2019 9:18 AM GMT)
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்தியது.
கொல்கத்தா:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போரட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தின் அம்சங்களை விளக்கியும் பேரணி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியை நட்டா துவக்கி வைத்தார். இதில் மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ், தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த பேரணியானது மத்திய கொல்கத்தாவின் ஹிந்த் சினிமா பகுதியில் இருந்து, ஷியாம்பஜார் வரை நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X