search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    மோடியும் அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர் - ராகுல் குற்றச்சாட்டு

    கோபத்தில் இருந்து தப்பிக்க வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக்கொள்ளும் மோடியும் அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

    அன்பான இந்திய இளைஞர்களே! மோடியும் அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டனர். வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளால் உங்களது கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை.

    ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவு

    அதனால்தான், நமது அன்புக்குரிய நாட்டை பிரித்து, வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இந்தியரிடமும் அன்பு காட்டுவதன் மூலமாக மட்டுமே இவர்களை நம்மால் வீழ்த்த முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×