என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரை விவசாயக்கடன்கள் தள்ளுபடி - உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்21 Dec 2019 1:15 PM GMT (Updated: 21 Dec 2019 1:15 PM GMT)
மகாராஷ்டிராவில் தலா 2 லட்சம் ரூபாய் வரை விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இக்கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து போதிய விளைச்சல் கிடைக்கவில்லை.
இதனால், வங்கிகளில் பெற்றிருந்த விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபை இன்று கூடியது. அதில் பங்கேற்ற முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, 'வங்கிகளில் செப்டம்பர் 30-ம் தேதிவரை விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக்கடன் தொகை அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், விவசாயக் கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X