search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    60 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது

    கோவாவில் 60 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்ய முயன்ற 22 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பனாஜி:

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் பாக்சுவாலா (வயது 22). இவர் வடக்கு கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.

    லால் பாக்சுவாலா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் வேலை செய்யும் உணவகத்தின் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த 60 வயது பெண்ணை கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணின் முகத்தில்  தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். 

    பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்ட மற்ற சர்வர்கள், அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை காப்பாற்றினர். லால் பாக்சுவாலாவை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

    60 வயது பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×