என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
60 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது
Byமாலை மலர்21 Dec 2019 5:56 AM GMT (Updated: 21 Dec 2019 5:56 AM GMT)
கோவாவில் 60 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்ய முயன்ற 22 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனாஜி:
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் பாக்சுவாலா (வயது 22). இவர் வடக்கு கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.
லால் பாக்சுவாலா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் வேலை செய்யும் உணவகத்தின் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த 60 வயது பெண்ணை கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்ட மற்ற சர்வர்கள், அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை காப்பாற்றினர். லால் பாக்சுவாலாவை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
60 வயது பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X