என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா மந்திரிசபை 23-ந் தேதி விரிவாக்கம்?
Byமாலை மலர்18 Dec 2019 1:41 AM GMT (Updated: 18 Dec 2019 1:41 AM GMT)
மகாராஷ்டிரா மந்திரி சபை 23-ந் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
மும்பை :
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பின் நிலவிய பெரும் அரசியல் குழப்பங்களை அடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இந்த புதிய அரசில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
தற்போது நாக்பூரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அங்கு நேற்று 3 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தார்.
பின்னர் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், “சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சரத்பவார் சந்திக்க உள்ளார்” என்றார்.
வருகிற 21-ந் தேதியுடன் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. எனவே வருகிற 23-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பின் நிலவிய பெரும் அரசியல் குழப்பங்களை அடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இந்த புதிய அரசில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
தற்போது நாக்பூரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அங்கு நேற்று 3 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தார்.
பின்னர் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், “சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சரத்பவார் சந்திக்க உள்ளார்” என்றார்.
வருகிற 21-ந் தேதியுடன் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. எனவே வருகிற 23-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X