என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் இழுத்துப்போட்டு அடிப்பதா? - சோனியா ஆவேசம்
Byமாலை மலர்17 Dec 2019 12:57 PM GMT (Updated: 17 Dec 2019 12:57 PM GMT)
டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட்ட சோனியா காந்தி கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் அடிப்பதா? என வினவியுள்ளார்.
புதுடெல்லி:
தொடர்ந்து பேசிய அவர், ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் நிலைமை நாட்டின் தலைநகரான டெல்லி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இது மேலும் பரவக்கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம். அமைதியான போராட்டத்தை போலீசார் கையாண்ட விதம் குறித்து நாங்கள் வேதனை அடைந்துள்ளோம்.
ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்த போலீசார் ஈவிரக்கமின்றி மாணவிகளை வெளியே இழுத்துப்போட்டு அடித்துள்ளனர் என்ற உதாரணத்தை டெல்லி போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.
மக்களின் குரலை அடைத்துவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி தலைமையிலான அரசு இரக்கமே காட்டுவதில்லை’ எனவும் குறிப்பிட்டார்.
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை இன்று மாலை சந்தித்து முறையிட்டனர்.
பின்னர், ஜனாதிபதி மாளிகை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி ஜாமியா கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் இழுத்துப்போட்டு அடிப்பதா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் நிலைமை நாட்டின் தலைநகரான டெல்லி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இது மேலும் பரவக்கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம். அமைதியான போராட்டத்தை போலீசார் கையாண்ட விதம் குறித்து நாங்கள் வேதனை அடைந்துள்ளோம்.
ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்த போலீசார் ஈவிரக்கமின்றி மாணவிகளை வெளியே இழுத்துப்போட்டு அடித்துள்ளனர் என்ற உதாரணத்தை டெல்லி போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.
மக்களின் குரலை அடைத்துவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி தலைமையிலான அரசு இரக்கமே காட்டுவதில்லை’ எனவும் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X