என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு நிவாரணம்: பாஜக, சிவசேனா வாக்குவாதத்தால் சட்டசபை ஒத்திவைப்பு
Byமாலை மலர்17 Dec 2019 9:43 AM GMT (Updated: 17 Dec 2019 2:14 PM GMT)
ஆட்சியில் இல்லாதபோது சிவசேனா கூறியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்க வலியுறுத்தி ஏற்பட்ட அமளியால் மகாராஷ்டிரா சட்டசபை ஒத்திவைக்கப்படது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் அளவுக்கதிகமாக பெய்த மழையால் பல லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் பயிர்கள் அழிந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என முன்னர் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா வலியுறுத்தி இருந்தது.
தற்போது அம்மாநிலத்தின் ஆளும்கட்சியாக சிவசேனா மாறியுள்ள நிலையில் இன்று காலை சட்டசபைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குங்கள் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர்.
இதனால் ஆளும் சிவசேனா மற்றும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களிடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மையப்பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை பாஜக எம்.எல்.ஏ.க்கள் பறிக்க முயன்றனர். இருதரப்பினருக்கிடையிலும் கைகலப்பு முற்றும் சூழல் ஏற்பட்டதால் சட்டசபையை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் நானா பட்டோல் அறிவித்தார்.
அரைமணி நேரத்துக்கு பின்னரும் இதே நிலைமை நீடித்ததால் அவையில் நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அளவுக்கதிகமாக பெய்த மழையால் பல லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் பயிர்கள் அழிந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என முன்னர் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா வலியுறுத்தி இருந்தது.
தற்போது அம்மாநிலத்தின் ஆளும்கட்சியாக சிவசேனா மாறியுள்ள நிலையில் இன்று காலை சட்டசபைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குங்கள் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர்.
இதனால் ஆளும் சிவசேனா மற்றும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களிடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மையப்பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை பாஜக எம்.எல்.ஏ.க்கள் பறிக்க முயன்றனர். இருதரப்பினருக்கிடையிலும் கைகலப்பு முற்றும் சூழல் ஏற்பட்டதால் சட்டசபையை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் நானா பட்டோல் அறிவித்தார்.
அரைமணி நேரத்துக்கு பின்னரும் இதே நிலைமை நீடித்ததால் அவையில் நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X