search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரியங்கா காந்தி
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரியங்கா காந்தி

    ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - இந்தியா கேட் அருகே பிரியங்கா காந்தி போராட்டம்

    ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள்  நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. 

    இதனால் போலீசார் அந்த பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கலவரம் தொடர்பாக சுமார் 60 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரியங்கா காந்தி

    இந்நிலையில், ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே போராட்டதில் ஈடுபட்டார். 
    Next Story
    ×