search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    2-வது திருமணத்துக்கு மனைவி சம்மதிக்காததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

    2-வது திருமணம் செய்ய மனைவி சம்மதிக்காததால் கங்கவரம் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதியர் அமர்நாத் (வயது 32)-சந்தியாராணி(30). கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    ஒரு ஆண்டுக்கு முன்பு அமர்நாத்துக்கும், மகராஷ்டிராவை சேர்ந்த சேர்ந்த அஞ்சலிநாத் (26) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நன்பர்களாக பழகினர். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவரை, 2-வதாக திருமணம் செய்து கொள்ள, அமர்நாத் தன்னுடைய மனைவியை சம்மதிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சந்தியாராணி மற்றும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் மனமுடைந்த அமர்நாத்தும், அஞ்சலிநாத்தும் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பெதகாபள்ளி கிராமத்துக்கு வந்தனர்.

    அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அமர்நாத்தின் உறவினர்கள் நிலத்துக்கு விவசாயப் பணிகளில் ஈடுபட சென்றனர்.

    நிலத்தில் இருந்த மரத்தில் கள்ளக்காதல் ஜோடி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கங்கவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ்ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஞ்சலிநாத், அமர்நாத் ஆகியோரின் பிணங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பலமநேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×