என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
Byமாலை மலர்16 Dec 2019 8:25 AM GMT (Updated: 16 Dec 2019 8:25 AM GMT)
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா தலைமையில் இன்று கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை பா.ஜனதா கட்சி நிறைவேற்றியது.
சட்டம் நிறைவேறியதும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில மந்திரிகள், காங்கிரஸ் - கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் இருகட்சிகளை சேர்ந்த தொண்டரகள் பெருமளவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று முதல் மந்திரி மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்து சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை பா.ஜனதா கட்சி நிறைவேற்றியது.
சட்டம் நிறைவேறியதும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கேரளா, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று முதல் மந்திரி மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X