search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு
    X
    மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு

    டெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு

    டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை.,மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

    போராட்டம், வன்முறையாக மாறி உள்ளது. இந்தநிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள்  போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 3 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது.

    தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதமடைந்தது. 2 பேர் காயம் அடைந்தனர். போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    இந்தநிலையில்,  இரவில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் திடீரென மோதினர். இதில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலை. வளாகத்திற்குள் போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானுல்லா தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுத்துள்ளார்.

    பல்கலைகழகத்தை ஒட்டிய பல்வேறு சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்து பாதிப்பை ஏற்படுத்தியதால் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது, அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையிலேயே போராட வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை ஏற்படுத்திய உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×