search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பயல் மற்றும் பேனா (கோப்பு படம்)
    X
    கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பயல் மற்றும் பேனா (கோப்பு படம்)

    பேனா பறித்த தகராறு - வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி

    10 வயது நிரம்பிய சிறுமி பேனாவை யார் வைத்துக்கொள்வது என ஏற்பட்ட தகராறில் தனது வகுப்பு தோழியையே அடித்துக்கொன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சக்சு பகுதியில் உள்ள படாலி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயல்(12) என்ற சிறுமி கல்வி பயின்று வந்துள்ளார். 

    இதற்கிடையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 11) வியாழக்கிழமை பயல் வகுப்பில் இருந்த போது அவர் வைத்திருந்த ஒரு பேனாவை அதே வகுப்பில் பயின்று வரும் 10 வயது நிரம்பிய அவரது தோழி பறித்துக்கொண்டார். அந்த நேரம் பள்ளி வகுப்புகள் முடிவடைந்ததையடுத்து அந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    ஆனால், பேனாவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என எண்ணிய பயல் தனது பேனாவை பரித்துக்கொண்டு சென்ற தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் சிறுமியின் வீட்டில் அவளது பெற்றோர் யாரும் இல்லை. பயல் பேனாவை தன்னிடம் கொடுத்துவிடும்படி தனது தோழியிடம் கேட்டுள்ளார். அப்போது இரு சிறுமிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. 

    வாக்குவாதம் முற்றிய நிலையில் 10 வயது நிரம்பிய அந்த சிறுமி கயலை இரும்பு கம்பியால் தலை, வயிறு மற்றும் முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கயல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பயலை கொலை செய்த சிறுமியின் பெற்றோர்

    இதன் பின்னர் வீட்டிற்கு வந்த தனது தாயிடம் பேனா சண்டையில் தனது பள்ளி வகுப்பு தோழியை கொலை செய்து விட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். தனது மகள் செய்த இந்த கொலையை மறைத்துவிட வேண்டுமேன எண்ணிய சிறுமியின் தாய் உயிரிழந்த பயலின் உடலை ஒரு மூட்டையில் கட்டி வீட்டின் அருகில் இருந்த ஒரு குட்டையில் வீசியுள்ளார். 

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கணவரிடம் மகள் செய்த கொலையையும் அதை மறைக்க தான் செய்த காரியத்தையும் அப்பெண் கூறியுள்ளார். இதை கேட்ட சிறுமியின் தந்தை தனது மனைவியால் குட்டையில் வீசப்பட்ட கயலின் உடலை மீட்டு ஊருக்கு வெளிப்புறம் உள்ள ஒரு பகுதியில் புதைத்துள்ளார். 

    இதற்கிடையில், பள்ளி சென்ற குழந்தை கயலை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பேனா தகராறு காரணமாக சக வகுப்பு தோழியே சிறுமியை கொலை செய்தது அந்த சிறுமியின் பெற்றோர் இந்த கொலையை மூடி மறைத்ததையும் கண்டுபிடித்தனர். 

    இதையடுத்து, கயலின் வகுப்பு தோழி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த போலீசார் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கயலின் உடலை மீட்டனர். பேனா தகராறில் 12 வயது சிறுமியை சக வகுப்பு தோழியே கொலை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     
    Next Story
    ×