search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டசபை
    X
    ஆந்திர சட்டசபை

    கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தண்டனை - ஆந்திராவில் புதிய மசோதா நிறைவேறியது

    ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேறியது.
    அமராவதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு பலரும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்தனர்.

    அதேவேளையில் எதிர்ப்பும் கிளம்பியது. என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும், போலீசாரையும் பாராட்டினார்.

    இதற்கிடையே, ஆந்திர சட்டசபையில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பேசும்போது, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

    அதன்படி, சமீபத்தில் நடந்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். இதில் முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும்.

    ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மசோதா இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஆந்திரா மாநிலம் தான் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×