என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவல் நிலையங்களின் மின்சப்ளையை துண்டித்த பஞ்சாப் மின்சார வாரியம்
Byமாலை மலர்13 Dec 2019 3:43 AM GMT (Updated: 13 Dec 2019 10:29 AM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் கரண்ட் பில் கட்டாததால் சில காவல் நிலையங்களுக்கான மின்சப்ளையை மின்சார வாரியம் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
லூதியானா:
பஞ்சாப் மாநிலத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள என பல்வேறு அரசு கட்டிடங்களுக்கான மின் கட்டணம் செலுத்தப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், பணம் செலுத்தப்படவில்லை.
இதையடுத்து பஞ்சாப் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களுக்கான மின்சப்ளையை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில் லூதியானாவில் உள்ள 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் காவல் நிலையங்கள் வெளிச்சம் இன்றி இருட்டாக காணப்பட்டன. விரைவில் கட்டணத்தை செலுத்தி, மின்சப்ளை பெறுவதற்கான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
மக்களை பாதிக்கும் என்பதால் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரியம் துண்டிக்காமல் விட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X