என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் - பாஜக மந்திரி
Byமாலை மலர்12 Dec 2019 5:05 PM GMT (Updated: 12 Dec 2019 5:05 PM GMT)
சமஸ்கிருத மொழி பேசினால் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என பாஜக மந்திரி கணேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது.
மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய மத்தியபிரதேச மாநிலம் சட்னா தொகுதி பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ''சமஸ்கிருத மொழியை தினமும் பேசுவதால் மனித உடலின் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும். மேலும் மனித உடலில் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என அமெரிக்காவை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள ஆய்வில் சமஸ்கிருத மொழியில் கணினி புரோகிராமிங் செய்தால் பிரச்சனை இல்லாமல் செயல்படும். உலகத்தில் உள்ள 97 சதவீகித மொழிகளின் அடித்தளம் சமஸ்கிருத மொழியாகும். ஆங்கிலத்தில் உள்ள சகோதரர் (பிரதர்), கவ் (பசு) ஆகிய சொற்கள் சமஸ்கிருத மொழியில் இருந்துதான் வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X