என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது - பினராயி விஜயன்
Byமாலை மலர்12 Dec 2019 3:51 PM GMT (Updated: 12 Dec 2019 3:51 PM GMT)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்:
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும்.
குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்காளதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை நாசப்படுத்தும் நடவடிக்கை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X