search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    நிர்பயா வழக்கு குற்றவாளியின் சீராய்வு மனு டிசம்பர் 17ல் விசாரணை - தள்ளிப்போகும் தூக்குத்தண்டனை

    டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்கின் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 17-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைதுசெய்தனர்.

    விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. குற்றவாளிகளின் கருணை மனுவும் நிராகரிக்க்ப்பட்டது.

    இதனால் தூக்குப் போட போவதாக வாரண்ட்டும் வழங்கப்பட்டு விட்டது. சட்டப்படி கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2  பேரை அனுப்புகிறது உத்தர பிரதேசம்.

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார்  சிங், சுப்ரீம் கோர்ட்டில் , தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது டிசம்பர் 17-ம் தேதி 3 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது. இதனால், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.
    Next Story
    ×