என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Byமாலை மலர்12 Dec 2019 3:57 AM GMT (Updated: 12 Dec 2019 3:57 AM GMT)
ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தலாக 17 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். முன்னாள் மத்திய மந்திரி பாஜக எம்பியுமான ஜெயந்த் சின்கா ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
3-வது கட்ட வாக்குப்பதிவுக்காக பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, சத்ருகன் சின்கா ஆகியோரும் பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.
இன்று நடைபெற்று வரும் தேர்தல் ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் அந்த அமைப்பு 14 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த மாணவர் அமைப்பு 2014 தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது. தற்போது 52 தொகுதிகளில் களத்தில் குதித்துள்ளது.
ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X