என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி
Byமாலை மலர்11 Dec 2019 4:57 PM GMT (Updated: 11 Dec 2019 4:57 PM GMT)
குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதையடுத்து இன்று இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டின் முக்கியமான நாள் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும், ஆதராகவும் இரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
இறுதியில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகினது.
இதன் மூலம் குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதல் பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.
A landmark day for India and our nation’s ethos of compassion and brotherhood!
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
Glad that the #CAB2019 has been passed in the #RajyaSabha. Gratitude to all the MPs who voted in favour of the Bill.
This Bill will alleviate the suffering of many who faced persecution for years.
டுவிட்டரில் அவர் பதிவிட்ட செய்தியாவது, ''இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டில் இன்று முக்கியமான நாள். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.களுக்கும் வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக மதரீதியிலாக துன்பங்களை அனுபவித்துவரும் நபர்களின் துயரை தணிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X