என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி
Byமாலை மலர்10 Dec 2019 11:08 PM GMT (Updated: 10 Dec 2019 11:08 PM GMT)
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ராமர் கோவில் கட்டவும், அயோத்தி நகர மேம்பாட்டுக்காகவும் ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது, அவர்களது அதிகாரம், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது உள்பட இதர பணிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அதே காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதன்படி, 3 மாத காலத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ராமர் கோவில் கட்டவும், அயோத்தி நகர மேம்பாட்டுக்காகவும் ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது, அவர்களது அதிகாரம், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது உள்பட இதர பணிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அதே காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதன்படி, 3 மாத காலத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X