என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது? - அமித் ஷா விளக்கம்
Byமாலை மலர்10 Dec 2019 10:10 PM GMT (Updated: 10 Dec 2019 10:10 PM GMT)
காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்படுவது எப்போது என்று துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது:-
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இயல்புநிலை நிலவி வருகிறது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 99.5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். கோர்ட்டுகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்துள்ளன. 144 தடை உத்தரவோ, ஊரடங்கு உத்தரவோ அமலில் இல்லை.
காங்கிரஸ் அரசு, ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் காவலில் வைத்திருந்தது. அதுபோல், காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்ற நாங்கள் விரும்பவில்லை. தலைவர்களை தேவையின்றி காவலில் வைத்திருக்க எங்களுக்கு ஆசை இல்லை. காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் உரிய நேரத்தில் விடுவிக்கும். இதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்படுவது எப்போது என்று துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது:-
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இயல்புநிலை நிலவி வருகிறது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 99.5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். கோர்ட்டுகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்துள்ளன. 144 தடை உத்தரவோ, ஊரடங்கு உத்தரவோ அமலில் இல்லை.
காங்கிரஸ் அரசு, ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் காவலில் வைத்திருந்தது. அதுபோல், காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்ற நாங்கள் விரும்பவில்லை. தலைவர்களை தேவையின்றி காவலில் வைத்திருக்க எங்களுக்கு ஆசை இல்லை. காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் உரிய நேரத்தில் விடுவிக்கும். இதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X