search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பிரேம்குமார், சுனிதா
    X
    கைதான பிரேம்குமார், சுனிதா

    திருவனந்தபுரம் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்

    திருவனந்தபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவன் மற்றும் கள்ளகாதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் சங்கானாச்சேரியை சேர்ந்தவர் பிரேம்குமார்.

    இவரது மனைவி வித்யா. இவர்கள் இருவரும் திருப்பணித்துறா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி மனைவி வித்யாவை காணவில்லை என்று பிரேம் குமார் உதயம்பேரூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வித்யாவை தேடி வந்தனர். இது தொடர்பாக அவரது கணவர் பிரேம்குமாரிடமும் விசாரித்தனர். அப்போது கணவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் பிரேம்குமாரை ரகசியமாக கண்காணித்தனர். இதில் அவருக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் சுனிதா என்பவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

    சுனிதா, பிரேம்குமார் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதையும் அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் வித்யாவை அவரது கணவர் பிரேம் குமாரே கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு நர்சு சுனிதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் வித்யாவை திருவனந்தபுரம் அருகே பேயாடு என்ற இடத்தில் உள்ள நண்பரின் வீட்டில் வைத்து கொலை செய்ததாகவும், பின்னர் உடலை அங்கிருந்து நெல்லை பகுதிக்கு கொண்டு சென்று காட்டுபகுதியில் வீசிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் வித்யாவின் உடலை கண்டுபிடித்து மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். வித்யாவின் உடல் கிடைத்த பின்பு பிரேத பரிசோதனை நடத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே கைதான பிரேம்குமார், நர்சு சுனிதா இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×