search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்
    X
    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்

    டெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அனாஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து

    டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனாஜ் மண்டி கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. அதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

    தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததும், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

    அனாஜ் மண்டியில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழும் பெறவில்லை. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் சிலர், அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×