என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்பழிப்பு வழக்குகளில் இரு மாதங்களில் குற்றப்பத்திரிகை - 6 மாதங்களுக்குள் தீர்ப்பு
Byமாலை மலர்8 Dec 2019 3:02 PM GMT (Updated: 8 Dec 2019 3:02 PM GMT)
கற்பழிப்பு சம்பவங்களில் இரு மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவும் வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
பாட்னா:
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிடாக நடைபெற்றுவரும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் துரதிர்ஷ்டவசமானது, மிகுந்த கண்டனத்துக்குரியது என ரவிசங்கர் பிரசாத் வேதனை தெரிவித்தார்.
கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வரும் வழக்குகளில் போலீசாரின் விசாரணை 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாக வேண்டும் என அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கும் நான் கடிதம் எழுதவுள்ளேன்.
நீதிமன்றத்துக்கு வரும் இத்தகைய வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.
மேலும், கற்பழிப்பு மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக விரைவு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X