search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா

    நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கற்பழித்து எரித்துக் கொலை, உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கற்பழிக்கப்பட்ட ஒரு இளம்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல போகும் வழியில் தடுத்து நிறுத்தி, எரித்துக் கொலை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் செய்திகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இந்நிலையில், ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் தேதியை தனது பிறந்தநாளாக குடும்பத்தார் மற்றும் கட்சியினருடன் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி(73) இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை நிலைய நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்திக்காக வெட்டிய கேக்

    நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதனால் வேதனையடைந்துள்ள சோனியா காந்தி தனது பிறந்தநாள்  கொண்டாட்டத்தை ரத்து செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×