search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா என்கவுண்டர்
    X
    தெலுங்கானா என்கவுண்டர்

    ஐதராபாத்: என்கவுண்டர் செய்யப்பட்ட 4 குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவு

    ஐதராபாத்தில் இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கொண்ட கும்பலால் கடத்திச்சென்று கற்பழித்து எரித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர். 

    தெலுங்கானா ஹைகோர்ட்டு

    அப்போது அந்த குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு சரமாரியாக சுட்டார். இதனால் தங்களை தற்காத்துக்கொள்ள போலீசார் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரும் உயிரிழந்தனர். 

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் சார்பில் இன்று மாலை தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 9-ம் தேதி இரவு 8 மணிவரை என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடலை பதப்படுத்திவைக்க மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 
    Next Story
    ×