என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல்
Byமாலை மலர்6 Dec 2019 2:18 PM GMT (Updated: 9 Dec 2019 4:00 PM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இங்கு ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 47 லட்சத்து 24 ஆயிரத்து 968 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 260 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X