என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாசுபாட்டால் மனித ஆயுட்காலம் குறைந்து விடாது - பிரகாஷ் ஜவடேகர்
Byமாலை மலர்6 Dec 2019 11:20 AM GMT (Updated: 6 Dec 2019 11:20 AM GMT)
இயற்கை மாசுபாடுகளினால் மனிதர்களின் ஆயுட்காலம் குறையும் என இந்தியாவில் எந்த ஆய்வறிக்கையும் தெரிவிக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்கள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு போன்ற விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் துறைக்கான மத்திய மந்திரி ஜவடேகர் மாசுபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
‘இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. மக்கள் மத்தியில் மாசுபாடுகள் குறித்த பயத்தை உருவாக்க வேண்டாம். மாசுபாட்டிற்கும் ஆயுட்காலம் குறைவதற்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக எந்த இந்திய ஆய்வறிக்கையும் தெரிவிக்கவில்லை’ என ஜவடேகர் தெரிவித்தார்.
நாடு முழுவதும், காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள தேசிய தூய்மையான காற்று திட்டத்தை (என்சிஏபி) மத்திய அரசு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X