என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெறுபவர்கள் கருணை மனு அளிக்க உரிமை கூடாது -ஜனாதிபதி
Byமாலை மலர்6 Dec 2019 9:48 AM GMT (Updated: 6 Dec 2019 9:48 AM GMT)
போக்சோ சட்டத்தின்கீழ் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை அளிக்கக் கூடாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிரோகியில் நடந்த பெண்களுக்கான தேசிய மாநாட்டில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
பெண்கள் பாதுகாப்பு தீவிர பிரச்சனையாக உள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை அளிக்கக் கூடாது. கருணை மனுக்களை பாராளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X