என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்
Byமாலை மலர்4 Dec 2019 9:33 PM GMT (Updated: 4 Dec 2019 9:33 PM GMT)
நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது, “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பலவீனமாகி விட்டார். அவர் இனிமேல் நிர்பலா சீதாராமன்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு சவுத்ரி நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க தொடங்கும்போது, சவுத்ரி குறுக்கிட்டார்.
அவர் பேசுகையில், “எனது கருத்து, நிதி மந்திரியை காயப்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு சகோதரி போன்றவர். என்னை அவருடைய சகோதரனாகவே கருதுகிறேன்” என்றார்.
அதற்கு நிர்மலா சீதாராமன் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தனது பதிலுரையின் இறுதியில், “நான் இன்னும் சப்லா (அதிகாரம் மிக்கவள்) தான்” என்று அவர் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது, “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பலவீனமாகி விட்டார். அவர் இனிமேல் நிர்பலா சீதாராமன்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு சவுத்ரி நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க தொடங்கும்போது, சவுத்ரி குறுக்கிட்டார்.
அதற்கு நிர்மலா சீதாராமன் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தனது பதிலுரையின் இறுதியில், “நான் இன்னும் சப்லா (அதிகாரம் மிக்கவள்) தான்” என்று அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X