search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியானா - தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி மரணம்

    அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் தந்தையால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் வசித்து வரும் 9 வயது சிறுமியின் தாயும், தந்தையும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    கடந்த 27-ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவரது தந்தை சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் சிறுமியின் வீட்டில் அவரை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    மறுநாள் முதல் சிறுமி தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரோட்டக் மாவட்ட போலீசார் தலைமறைவான தந்தையை தேடி வருகின்றனர்.

    தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு 9 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×