என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புல் புல் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடி ஒதுக்கீடு
Byமாலை மலர்3 Dec 2019 1:56 PM GMT (Updated: 3 Dec 2019 1:56 PM GMT)
புல் புல் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
புதுடெல்லி:
வங்க கடலில் உருவான புல் புல் புயல் கடந்த மாதம் தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தில் புல் புல் புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.
ஒடிசாவில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்தன. மேலும் அறுவடைக்கு காத்திருந்த கோதுமை பயிர்கள் அதிகளவில் நீரில் மூழ்கி வீணாயின.
இந்நிலையில், புல் புல் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், மேற்கு வங்காள மாநிலத்திற்கு ரூ.414.90 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.552 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X