search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கைது

    காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.
    காஷ்மீர்:

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள இகாலா பிலாமர் என்ற காட்டுப்பகுதிக்குள் நேற்று நள்ளிரவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்த காட்டுப்பகுதிக்குள் பயங்கரவாதி கூடாரம் அமைத்து தங்கியிருந்ததை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி படுகாயமடைந்தான். 

    இதையடுத்து, அவனை கைது செய்த பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    மேலும், பயங்கரவாதி பயன்படுத்திய கூடாரத்தை அழித்த படையினர் அதில் இருந்து 303 ரக துப்பாக்கி, மற்றும் தோட்டாகளை கைப்பற்றினர். 

    பிடிபட்ட பயங்கரவாதி தாரி ஹுசேன் வானி கடந்த நவம்பர் 14-ம் தேதி தனது குடும்பத்தை விட்டு விலகி பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ளார் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×