என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அகிலேஷ் யாதவ்
Byமாலை மலர்2 Dec 2019 5:51 PM GMT (Updated: 2 Dec 2019 5:51 PM GMT)
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:
நாட்டில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநில எதிர் கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவஙகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம், பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அந்த அளவுக்கு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு 'காட்டு ராஜாங்கம்' இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணாக 100 என்ற சுலபமான நம்பரை வைத்திருந்தோம். ஆனால் தற்போது உள்ள பாஜக அரசு அந்த எண்ணை 112 என மாற்றி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X