search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    ராஜஸ்தானில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்ற டிரைவர் கைது

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய முதல் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்
     
    சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பு முடிந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில்  தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    சிறுமியின் பிரேதம் கிடந்த இடம்

    நேற்று அப்பகுதியில் புதர்களுக்கு இடையே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    சிறுமியின் கழுத்தில் அணிந்திருந்த சீருடை பெல்ட்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? எத்தனை பேர்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குடிபோதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை இன்று கைது செய்தனர்.

    மகேந்திரா (எ) தோலு என்ற அந்நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, இந்த சம்பவத்தை பெற்றோரிடம் அவள் கூறி விடுவாள் என்ற பயத்தில் கொலை செய்து விட்டதாக தெரியவந்துள்ளது.
    Next Story
    ×