என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் - அமித்ஷா
Byமாலை மலர்2 Dec 2019 3:04 PM GMT (Updated: 2 Dec 2019 3:04 PM GMT)
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அம்மாநிலத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு வரும் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்பட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா ஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
'பிரதமர் மோடியும், முதல்மந்திரியாக உள்ள பாஜகவின் ரகுபர் தாசும் இணைந்து இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் உருவாகும் வழியை அழித்து வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியுள்ளனர்.
இம்மாநிலத்தில் தற்போது உள்ள பாஜக தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழல் குற்றமும் நடைபெறவில்லை. ஜார்கண்ட் வரலாற்றிலேயே ஒரு அரசு 5 ஆண்டுகள் தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்தது பாஜக தான்.
பாஜக-வால் தான் நிலையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத்தேர்தலுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) பட்டியல் தயாரிக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X