என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்டையும் மாற்றுவோம் - ராகுல் காந்தி வாக்குறுதி
Byமாலை மலர்2 Dec 2019 11:28 AM GMT (Updated: 2 Dec 2019 11:28 AM GMT)
ஜார்க்கன்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்டையும் மாற்றுவோம் என தெரிவித்தார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சிம்டேகா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த ஓராண்டுகள் அங்கு காட்சி மாறிவிட்டது. அதைப்போல் ஜார்க்கன்டில் எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்ட் மாநிலத்தையும் மாற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டார்.
சத்திஸ்கரில் பழங்குடியின மக்களின் நிலங்களை எல்லாம் பாஜக அரசு பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுத்து விட்டது. எங்கள் ஆட்சியில் அந்த நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடன் ஒப்படைக்கப்பட்டன. உங்களது நிலம், காடுகள் மற்றும் நீர்வளத்துக்கு பாதுகாவலர்களாக நாங்கள் இருப்போம்.
நாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். இங்கேயும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சிம்டேகா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த ஓராண்டுகள் அங்கு காட்சி மாறிவிட்டது. அதைப்போல் ஜார்க்கன்டில் எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்ட் மாநிலத்தையும் மாற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டார்.
சத்திஸ்கரில் பழங்குடியின மக்களின் நிலங்களை எல்லாம் பாஜக அரசு பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுத்து விட்டது. எங்கள் ஆட்சியில் அந்த நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடன் ஒப்படைக்கப்பட்டன. உங்களது நிலம், காடுகள் மற்றும் நீர்வளத்துக்கு பாதுகாவலர்களாக நாங்கள் இருப்போம்.
நாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். இங்கேயும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X