
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் மிக கடுமையான நேரடி போட்டி நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மாண்டியா தொகுதி சுயேட்சை எம்.பி.யான நடிகை சுமலதாவின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மாண்டியா தொகுதியில் சுமலதா வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா மறைமுக ஆதரவு தெரிவித்தது. இதனால் சுமலதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக சுமலதா மாறி இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இல்லை என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிஇருப்பதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறஉள்ள 15 தொகுதி மக்களும் புத்திசாலிகள். அவர்களுக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தெரியும்.