என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பெட்’ பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை விதியுங்கள் - பசுமை தீர்ப்பாயத்தில் சிறுவன் வழக்கு
Byமாலை மலர்1 Dec 2019 11:06 PM GMT (Updated: 2 Dec 2019 4:04 AM GMT)
மறுசுழற்சி செய்ய முடியாத ‘பெட்’ பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 16 வயது சிறுவன் வழக்கு தொடர்ந்துள்ளான்.
புதுடெல்லி:
மறுசுழற்சி செய்ய முடியாத ‘பெட்’ பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., பதஞ்சலி, கோகோ கோலா, பெப்சிகோ, பிஸ்லெரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதித்யா துபே என்ற 16 வயது சிறுவன், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளான்.
அதில் அவன் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு குப்பையில் தூக்கி எறிகிறார்கள். இதனால் நிலமும், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, இந்த கழிவுகளை மேற்கண்ட நிறுவனங்கள் திரும்பப்பெறும்வரை, ‘பெட்’ பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவன் கூறியுள்ளான்.
இந்த மனு, இவ்வாரம் விசாரணைக்கு வருகிறது.
மறுசுழற்சி செய்ய முடியாத ‘பெட்’ பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., பதஞ்சலி, கோகோ கோலா, பெப்சிகோ, பிஸ்லெரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதித்யா துபே என்ற 16 வயது சிறுவன், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளான்.
அதில் அவன் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு குப்பையில் தூக்கி எறிகிறார்கள். இதனால் நிலமும், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, இந்த கழிவுகளை மேற்கண்ட நிறுவனங்கள் திரும்பப்பெறும்வரை, ‘பெட்’ பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவன் கூறியுள்ளான்.
இந்த மனு, இவ்வாரம் விசாரணைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X