என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளம்: ஆம்னி பஸ்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி
Byமாலை மலர்30 Nov 2019 4:37 PM GMT (Updated: 30 Nov 2019 4:37 PM GMT)
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று ஆம்னி பஸ் மீது பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
கொல்கத்தா மாநிலம் சிலிகுரி பகுதியில் இருந்து 20-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாருக்கு சொந்தமான ஒரு ஆம்னி பஸ் பக்ராம்புரோ பகுதிக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சாலையின் அடுத்த பக்கத்தில் பஸ் சென்றது. அப்போது அதே சாலையில் எதிரே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை நேரத்தில் அதிக பனிப்பொழிவால் ஏற்பட்ட வெளிச்சமின்மை காரணமாக விபத்து நடைபெற்றுள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X