என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்காயம் விலை உயர்வு - ஓட்டல்களில் ஆனியன் தோசை 'கட்'
Byமாலை மலர்30 Nov 2019 1:01 PM GMT (Updated: 30 Nov 2019 1:01 PM GMT)
வெங்காய விலை உயர்வு காரணமாக பெங்களுரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் ஆனியன் தோசை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களுர்:
நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்கறி கடைகளில் உள்ள வெங்காயங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகரான பெங்களுருவில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் விலை உயர்வு காரணமாக ஆனியன் தோசை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த வி.காமட் என்பவர் கூறுகையில்,’ வெங்காய விலை உயர்வுக்கு தகுந்தவாறு சில பெரிய ஓட்டல்கள் உணவின் விலையை உயர்த்தியுள்ளனர். ஆனால் ,பெரும்பாலான ஓட்டல்கள் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு விலையை உயர்த்தாமல் வெங்காய தோசை போன்ற உணவுகளின் விற்பனையை நிறுத்தி அதன் பயன்பாட்டை குறைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X